ஓவியப்போட்டி 2018

சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை 27.06.2018 புதன்கிழமை பள்ளிமுதலவ்ர மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 30.09.2018 ஆம் நாள் பேர்ண் – புறூக்டோர்வ் மண்டபத்தில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் வைத்து வழங்கப்பெறும். ...Read More

சிறப்புத்தேர்வுக்கான விண்ணப்பம் கோரல்.

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, இந்தியா தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 27.05.2018 அன்று நடாத்தும் தமிழ்மொழி அடிப்படைக் கற்கைநெறி சிறப்புத்தேர்வுக்கான விண்ணப்பம் கோரல்.   31.03.2018 க்கு முதல் கீழ்காணும் படிவத்தினை நிரப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். Special Exam Application Mode for MoU2 (1) TESS-Application for Examination ...Read More

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள்

  தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து தமிழர் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு – 2049 தைத்திங்கள் முதலாம் நாள் (14.01.2018)   தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவினைத் தமிழ்க் கல்விச்சேவைத் தமிழ்ப் பள்ளிகள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடியிருந்தன. மாநில இணைப்பாளர், பள்ளிமுதல்வர்கள், துணைமுதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழையமாணவர்கள், பெற்றோர்கள், தமிழ்மக்கள் இணைந்த வகையில் பொங்கல் பொங்கிக் கதிரவனுக்குப் படைத்து மகிழ்ந்தனர். இயல், இசை, ...Read More

ஓவியப்போட்டி 2017- முடிவுகள்

ஓவியப்போட்டி 2017 முடிவுகள் தமிழ்க் கல்விச்சேவையினால் 28.05.2017 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதளுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 580 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. Result – Oviyam 2017 Final ...Read More

பள்ளி முதல்வர்களுக்கான செயலமர்வு 11.06.2017

சுவிற்சர்லாந்து தமிழ்க்கல்விச் சேவையினால் பள்ளிமுதல்வர்களுக்கான செயலமர்வு  ஒன்று (11.06.2017 ) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து 17.00 மணி வரை பேர்ண் மாநகரில் நடாத்தப்பெற்றது. கனடா ரொரன்ரோப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளரும், ரொரன்ரோ மாவட்டக் கல்வித் திணைக்களத்தின் அனைத்துலக மொழிக் கல்வித்திட்ட அலுவலரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கான கனேடிய நாட்டிற்கான விரிவுரையாளருமான திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்கள் கலந்து கொண்டு ...Read More

மாணவர்களின் தன்விபரம்

தமிழ்க் கல்விச்சேவையுடன் இணைந்து பணியாற்றும் பழைய மாணவர்கள் மற்றும் ஆண்டு 11 இல் கல்விகற்றுவரும் மாணவர்களின் தன்விபரம் தமிழ்க் கல்விச்சேவையின் பணிகளில் எமது இளையவர்களை இணைத்துக் கொள்ளும் நோக்கோடு தன்விபரப்படிவமொன்று 21.05.2017 பேர்ணில் நடைபெற்ற அவர்களுடனான ஒன்றுகூடலில் வழங்கப்பெற்றது. அன்றைய நாள் வருகை தராத மாணவர்களையும் எம்மோடு இணைத்துக் கொள்ளும் வகையில் அந்தப்படிவம் எமது இணையத்தளத்தில் தரவேற்றப்படுகிறது. இதனை 31.05.2017ஆம் திகதிக்கு ...Read More