ஓவியப்போட்டி 2019

2019 ஓவியப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்பப்படிவத்தினையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். ஓவியப்போட்டி 2019 விண்ணப்பப்படிவம் ஓவியப்போட்டி 2019 விதிமுறைகள் ...Read More

பொதுத்தேர்வு – 2019 விண்ணப்பப் படிவம்

தமிழ்க் கல்விச்சேவையால் பொதுத்தேர்வு மற்றும் மெய்வல்லுனர் போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விதிமுறைகளையும் விண்ணப்படிவங்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். பொதுத்தேர்வு விண்ணப்பப் படிவம் 2019 பொதுத்தேர்வு 2019 புதிய மாணவர் அனுமதி மெய்வல்லுனர் 2019 ...Read More

முத்தமிழ் விழா 2018

தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கீழ் இயங்கிவரும் 107 தமிழ்ப்பள்ளிகளும், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகமும், தமிழ்மக்களும் இணைந்து  முத்தமிழ் விழாவை 30.09.2018 ஞாயிறு பேர்ண் நகரில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந்நிகழ்வில் தாய்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர்கள், சுவிஸ் நாட்டுப் பிரமுகர்கள், தமிழ்ப்பள்ளிகளின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், தமிழாசிரியர்கள், கலையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள்  என இரண்டாயிரத்திற்கும் ...Read More

ஓவியப்போட்டி 2018: முடிவுகள்

தமிழ்க் கல்விச்சேவையினால்  27.05.2018 ஆம் நாள் நடாத்தப்பெற்ற ஓவியப்போட்டியின் முடிவுகளை இங்கே பார்வையிடலாம். சுவிஸ் நாடுதழுவிய ரீதியில் 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுகளுக்கு இங்கே அழுத்தவும்:  Oviyam 2018 Results ...Read More

மெய்வல்லுனர் போட்டி  2018

தமிழ்ச் சிறார்களினதும் இளையவர்களினதும் மெய்வல்லுனர் விளையாட்டுகளின் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை வளர்த்தெடுக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் கல்விச்சேவையால் நடாத்தப்படுகின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டி இவ்வாண்டும் பேர்ண், ஜெனீவா, செங்காலன், ரிசினோ, பாசல், சூரிச் ஆகிய வலயங்களில் நடைபெறுகின்றது. இப் போட்டியில் ஓட்டம், பந்தெறிதல், பந்துபொறுக்குதல், குண்டெறிதல், நீளம் பாய்தல் போன்ற போட்டிகளும் 11 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டமும், ஆசிரியர்களுக்கான ...Read More

தமிழ்மொழி  பட்டப்படிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு

தமிழ்க் கல்விச்சேவை   அண்ணாமலை  பல்கலைக்கழகத்துடன்  இணைந்து நடாத்தவுள்ள  தமிழ்மொழி  பட்டப்பிடிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித் தேர்வு இன்று (27.05.2018) பேர்ண், பாசல், சூரிச் ஆகிய  மூன்று  தேர்வு நிலையங்களில்  சிறப்பாக  நடைபெற்றது.  இத்தேர்வில்  ஐம்பத்தேழு ஆசிரியர்கள்  மற்றும்  இளையோர்கள்  பங்குபற்றினர். ...Read More