ஓவியப்போட்டி 2018

சுவிற்சர்லாந்து தமிழக் கல்விச்சேவையினால் 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய வகையில் ஓவியப்போட்டி நடாத்தப்பெற்றது. 18 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 607 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டி முடிவுகளினை 27.06.2018 புதன்கிழமை பள்ளிமுதலவ்ர மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 30.09.2018 ஆம் நாள் பேர்ண் – புறூக்டோர்வ் மண்டபத்தில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் வைத்து வழங்கப்பெறும். இப்போட்டி சிறப்பாக நடைபெறப் பணியாற்றிய கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதலவ்ர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அனைவருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்

 

மேலதிகப்புகைப்படங்களுக்கு:  www.facebook.com/pg/tamilschool.ch/photos/?tab=album&album_id=1553510934761192