ஓவியப்போட்டி 2019

சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் ஓவியப்போட்டி 26.05.2019 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய வகையில் நடாத்தப்பெற்றது. 20 நிலையங்களில் நடாத்தப்பெற்ற இப்போட்டியில் 665 மாணவர்கள் பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டியின் முடிவுகளினை 26.06.2019 புதன்கிழமை பள்ளிமுதல்வர் மூலமாக அல்லது கல்விச்சேவையின் இணையத்தளத்தில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம். வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் 14.09.2019 ஆம் நாள் சூரிச் டிட்டிக்கோன் மண்டபத்தில் நடைபெறவுள்ள முத்தமிழ் விழாவில் வைத்து வழங்கப்பெறும்.

இப்போட்டி சிறப்பாக நடைபெறப் பணியாற்றிய கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், பள்ளிமுதல்வர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள் அனைவருக்கும், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். அக்கறையுடன் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.