தமிழ்மொழி  பட்டப்படிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித்தேர்வு

தமிழ்க் கல்விச்சேவை   அண்ணாமலை  பல்கலைக்கழகத்துடன்  இணைந்து நடாத்தவுள்ள  தமிழ்மொழி  பட்டப்பிடிப்புக்கான  தகமைபெறும்  அடிப்படைக் கற்கைநெறித் தேர்வு இன்று (27.05.2018) பேர்ண், பாசல், சூரிச் ஆகிய  மூன்று  தேர்வு நிலையங்களில்  சிறப்பாக  நடைபெற்றது.  இத்தேர்வில்  ஐம்பத்தேழு ஆசிரியர்கள்  மற்றும்  இளையோர்கள்  பங்குபற்றினர்.