சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்

சூரிச் மாநிலத்தில் தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரல்

சூரிச் மாநிலத்தில் சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் கீழ் இயங்கிவரும்
தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களாப் பணியாற்றுவதற்குத் தகைமையுள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகள் தமிழ்மொழியைக் கற்பிப்பதற்கான
தகைமையும், அனுபவமும் கொண்டிருப்பதுடன் ஜேர்மன் மொழியில் B1 நிலையில்
சித்திபெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் தங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்,
கல்வித்தகைமை, அனுபவம், ஜேர்மன் மொழியறிவு ஆகிய விபரங்களினை உள்ளடக்கிய
தன்விபரக் குறிப்பினை, சான்றிதழ்களின் நிழற்பிரதிகளுடன் 15.04.2024 ஆம் நாளுக்கு
முன்னர் கிடைக்கக்கூடியதாக Tamil Education Service Switzerland,
Gewerbestrasse 4, 8162 Steinmaur.  எனும் முகவரிக்கு தபால்மூலம் அல்லது
info@tamilschool.ch எனும் மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கும் வண்ணம்
கேட்டுக்கொள்கிறோம்.

– தமிழ்க் கல்விச்வேவை சுவிற்சர்லாந்து